05 July 2013

பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் அல்ல

கேள்வி: பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார். தீண்டாமை எதிர்ப்பு போராட்டம், ஆலைய நுழைவு போராட்டம், இரட்டை குவளை எதிர்ப்பு போராட்டம் என அவர் நடத்திய போராட்டங்கள் கணக்கில் அடங்காது. எனவே தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் பெரியார் தானே?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:

இங்கே பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் அல்ல என்றும், அவர் பிற்படுத்த பட்டோருக்கான தலைவர் மட்டுமே என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. நாம் இரண்டு கண்ணோட்டங்களையும் அலசுவோம். அதற்க்கு முன்பு அவர் நடத்திய பொதுவான போராட்டங்களான 'குல கல்வி திட்டம் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம்' போன்றவற்றை ஒரு பார்வை பார்த்து விடுவோம்.

'இந்தி எதிர்ப்பு போராட்டம்':
பெரியாரின் இந்த போராட்டத்தின் நோக்கம் இந்தியால் தமிழ் கெட்டு விடும் , அதை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பிராமணர்கள் பெரும்பான்மையானோர் இந்தி கற்று வைத்திருந்தனர், எனவே அவர் இந்தியை எதிர்த்து, ஆங்கிலத்தை வலியுறுத்தினார். இந்த போராட்டத்தால் தமிழுக்கோ,தமிழருக்கோ எந்த பலனும் இல்லை.

'குல கல்வி திட்டம் எதிர்ப்பு'
இதன் மூலம் பிராமணர்கள் உட்பட அனைவரும் தங்களது குல தொழிலை செய்ய வேண்டும் என்ற ராசாசி அவர்களின் கருத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுவான போராட்டம். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பலன் அடைந்தனர் என்பது முட்டாள் தனமான வாதம்.

தாழ்த்தப்பட்டோருக்காக பெரியார் போராடினாரா?

தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்களை பற்றி பெரியாரின் கண்ணோட்டம் பற்றி ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்.

"துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்"
"வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்"
"அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்"


இந்த செய்தியை தி.மு.க .நடத்தும் முரசொலி பொங்கல் மலர் 1962 ல் வெளியிட்டு உள்ளது .இதே செய்தியை 2-3-1962 பெரியார் அச்சகம் வெளியிடும் நாத்திகம் செய்தி தாளிலும் வெளியிடப்பட்டு உள்ளது

தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை. இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை. இதில் இருந்து பெரியார் 'தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர்' என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

பெரியார் 'பிற்படுத்தபட்டோருக்காக போராடினாரா'?

பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை. அப்படி என்றால் தீண்டாமை எதிர்த்து போராட்டம், ஆலைய நுழைவு போராட்டம் எல்லாம் பெரியார் நடத்தினாரே. அதெல்லாம் யாருக்காக நடத்தினார்? இந்த கேள்விக்கு விடை தேடும் முன்பு, நாயக்கர்களால் (பெரியாரின் மூதாதையர்கள்) இந்த தமிழ் மண்ணில் புரையோடிய 'தீண்டாமை' கொடுமை பற்றியும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட பலருள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இங்கே பார்ப்போம்.

தோள் சீலை போராட்டம்

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆதிக்க சாதியினரால் 'பார்த்தாலே தீட்டு' என்று விலக்கி வைக்கப்பட்டு இருந்த அன்றைய சானார் இன்றைய நாடார் சமூக மக்களுக்காக மட்டுமே 'பெரியார்' ஆலைய நுழைவு, வைக்கம் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் அனைத்தும் நடத்தி உள்ளார். தோள் சீலை போராட்டம் என்பது அத்தக்காகிய போராட்டங்களில் ஒன்று. நாடார் சமூகம் உள்ளிட்ட 18 சாதிகளை சேர்ந்த பெண்கள் யாரும் 'தோள் சீலை' (Upper Cloth ) அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்தால் அப்பெண்டிரின் மார்பகங்களை அறுத்து எறிய வேண்டும் என்பது தான் ஆதிக்க சாதிகள் விதித்த கட்டுப்பாடு.அப்படி விதிமுறையையும் மீறி ரவிக்கை அணிந்து சென்ற நாடார் சமூக பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தான் 'தாலி அறுத்தான் சந்தை சம்பவம்'. 

"பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலிதஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும்இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது"

Source: தோள் சீலை போராட்டம்

மேலதிக தகவல்:
"The victory of the Channar Lahala or the Upper Cloth Mutiny (Maaru Marakkal Samaram), after half-a-century of violent struggle, is widely seen as the transformative event that triggered a wave of renaissance movements that shaped modern Kerala.
"'Cries for equality began to rise not just from various parts of Kerala, but from the whole of South India after the Channar Mutiny. The agitation to end ‘oozhiyam vela’ or work without pay, the agitation to secure entry into temples, the agitation to secure the right to walk on public roads, all these struggles that went on to change the face of Kerala were inspired by the success of the Upper Cloth Mutiny,' writes historian Joy Balan Vlaathangara in his book ‘Vaikuntaswamiyum Samoohika Navothanavum’. [...]
"It was western influence and the work of Christian missionaries like Charles Meed and Malt during the early part of the 19th century that revealed to the Nadars the indignity of their existence.
"There are historical accounts of labourers who had migrated to Sri Lanka to work in colonial tea plantations returning with enough money to lead European lifestyles. Converted Nadars, too, started wearing upper clothes and saw it as a sign of social progress.
"The upper castes, including the royalty, did not take kindly to these progressive thoughts. An account says that a lower caste lady who went to the palace of the Attingal Rani wearing an upper cloth had her breasts chopped off by royal decree.Out on the streets, the upper castes unleashed violence on Christian Nadar women who had their breasts covered."
Source: http://www.anti-caste.org/2009/07/150-years-ago-today-women-of-the-nadar-caste-in-kerala-won-right-to-cover-their-breasts.html

மேலாடை அணியலாம் என்று அரசு அறிவித்த தீர்ப்பு


நாடார் மக்களின் ஆலைய நுழைவு போராட்டம் பற்றி,
இரண்டாவது மூன்றாவது  கட்டுரைகளான  'தெற்கில் முதல் வெளிச்சம் '  மற்றும்'தென் திருவிதாங்கூர் தோள் சீலைப் போராட்டம் பற்றித் தோழர் சங்கையா விரிவாகவே பேசினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அன்று இருந்த சாதிக்கட்டுமான இறுக்கம்சாதி வேறுபாடுகள் 16 அடி, 36 அடி, 66 அடி எனக் கடைப்பிடிக்கப்பட்ட கொடுமைஒடுக்கப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்மார்புக்கு மேலே சேலை கட்டக்கூடாது எனும் வழக்கம்அதனை எதிர்த்து நடந்த போராட்டம் போன்றவற்றையும் நாடார்கள் என்னும் சாதியினரின் அன்றைய சமூக நிலமைஅவர்கள் சந்தித்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் பொண்றவற்றை புத்தகத்தின் பகுதிகளை வாசித்துக்காட்டி ,தோழர் சங்கையா எடுத்துக்காட்டியபோது இப்படியெல்லாம் ஒரு 150 ,160 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா ?எனத் தோழர்கள் கேள்வி எழுப்பிஅறிந்து கொள்ள உதவியது.

                            வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர் சங்கையா வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில் நுழைவுப்போராட்டம்கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் ,நாடார்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள்,அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874 &1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899)  போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம்வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை,நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்தது  போன்ற செய்திகளை நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார். 
Source: http://vasipporkalam.blogspot.in/2013/02/blog-post_13.html

இப்படி கணக்கு வழக்கு இன்றி தீண்டாமை அனுபவித்த 'நாடார்' சமூகத்துக்காக பெரியார் உழைத்ததை தான் இன்று அவர் ஏதோ 'தாழ்த்தப்பட்டோருக்காக' போராடினார் என்று சப்பை கட்டு கட்டுகின்றனர். முத்துராமலிங்க தேவர்,ராஜாஜி உட்பட பலரும் பறையர்,நாடார் போன்றோருக்கு 'மதுரை மீனாட்சி அம்மன்' கோவிலுக்குள் நுழைய 'ஆலைய நுழைவு போராட்டம்' நடத்தியுள்ளனர். ஆனால், பெரியார் நாடாரை விடுத்து இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் யாருக்காகவும், எங்கேயும், எந்த காலத்திலும் ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை.

அப்படி என்றால், ஏன் பெரியார் 'நாடார்' சமூக மக்களுக்கு மட்டும் போராட வேண்டும்? காரணம், இன்று நம்முள் எழுந்துள்ள தமிழ் தேசிய சிக்கலின் ஆணி வேறான 'தெலுங்கர்களின் ஆதிக்கம்' என்பதை சுமார் 150 வருடங்களுக்கு முன்பே அறிந்து கொண்டு, தங்களுக்கான ராஜ தந்திர காய் நகர்த்தல்களை செம்மையாக செய்து, நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியவர்கள் நம் நாடார் இன மக்கள். அவர்களின் எழுச்சியை மட்டுபடுத்தவும், நாடாரும் - பெரியாரும் பரஸ்பரம் தம்முள் வந்த அரசியல் திரை மறைவு ஒப்பந்தம் தான் பெரியாரை நாடாரை நோக்கி நகர்த்தியது, செயல் படுத்தியது.

பெரியார்-காமராஜர் இணைந்த அரசியல்
* சாணார்களின் ஒற்றுமை தான் அவர்களின் இன்றைய சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படை காரணம். அவர்கள் எந்த கூட்டத்துக்கு சென்றாலும் கையில் பணம் கொண்டு சென்று கொடுப்பதும், ஒன்றாக செயல்படுவதையும், தனது சமூக மக்கள் அவ்வாறு இல்லை என்றும் அடிக்கடி திரு.முத்துராமலிங்க தேவர் அவர்களே சிலாகித்து பேசி இருப்பார். 'கோவிலில் நுழைய விடவில்லையா? உனக்கென்று கோவிலை கட்டு. வங்கியில் உனக்கு கணக்கு இல்லையா? உனக்கென்று வங்கியை உருவாக்கு' --- இது தான் நாடார்களின் எழுச்சியின் தாரக மந்திரம்.

* 1919 ஆம் ஆண்டில் சாணார்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடோ, சலுகையோ வேண்டாம் என்று அறிவித்து விட்டனர். எனவே அவர்கள் SC பட்டியலிலோ, BC பட்டியலிலோ அப்போது இல்லை.

* 1956 ஆம் ஆண்டு "தங்களுக்கு சலுகை வேண்டாம், ஆனால் BC பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று போராடி வெற்றி பெற்றனர். அன்று முதல் இன்று வரை BC பட்டியலில் உள்ளனர். BC பட்டியலுக்குள் வந்துவிட்டால் 'தீண்டாமை' மற்றும் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்ற இமேஜ் போய் விடும் என்ற ஞானம் பல ஆண்டுகளுக்கு முன்பே (அதுவும் 1919 ஆம் ஆண்டு இல்லாத ஞானம்) நாடார் சமூக மக்களுக்கு வந்ததன் பின்னணியில் பெரியாரும் காமராஜரும் இல்லாமல் இல்லை. இந்த ஒரு உதாரணம் மூலம் எவ்வளவு நுணுக்கமாக தாழ்த்தப்பட்டோர், உயர் சாதி இடையேயான இன்றைய வன்முறைக்கு, திராவிடர்கள் வித்திட்டு வளர்த்து வருகின்றனர் என்பது தெளிவாக புலப்படும். அவர்கள் மனது வைத்தால் தான் ஒருவன் உயர் சாதி, அவர்கள் மனது வைத்து விட்டால் தாழ்ந்த சாதியும் (உதாரணம்: சின்ன மேளம்), உயர் சாதி தான்.

* இங்கே எந்த நாயுடுவுக்கும், பறையருக்கும் சண்டை வராது. வன்னியருக்கும், பறையருக்கும் தான் சண்டை வரும். அதற்க்கு 'ஆதிக்க சாதிக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்' இடையேயான சண்டை என்று திராவிடர்கள் விளக்கம் தருவார்கள். நாயுடுக்களும், நாயக்கரும் ஆதிக்க சாதி இல்லையா?

அட, பிற்படுத்த பட்டோருக்காவது பெரியார் உருபப்டியாக ஏதாவது செய்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. அவரின் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்.
"தெலுங்கர்களை பாதுக்காக்க ஒரு பாதுக்காப்பான கட்டமைப்பாக பிற்படுத்தோர் அரசியலை கையில் எடுத்து, அவர்களையும் தாழ்த்தப்பட்டோரையும் மோத விட்டு, அதன் மூலம் தனது இருப்பை எப்போது தக்க வைத்து கொள்வது மட்டும் அவர் நோக்கம்". இது தான் 'திராவிடத்தின்' நோக்கமும் கூட."

இந்த உண்மையை தமிழ் சாதிகள் விளங்கி கொள்ளாதவரை, சாதி மோதல்கள் தினம் தோறும் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது. சிந்தியுங்கள் தமிழர்களே...!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

04 July 2013

திராவிடமே ஈழ விடுதலைக்கு முதல் எதிரி

கேள்வி: கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் 'ஈழத்தை' வைத்து அரசியல் நாடகம் ஆடினாலும், வைகோ, பெரியார் போன்றோர் ஈழத்துக்காக குரல் கொடுத்து வந்து தானே இருக்கிறார்கள். 'வைகோ' ஒரு தெலுங்கர் என்று கூறி அவர் மீது சேற்றை வாரி இறைத்தால், ஈழத்துக்காக குரல் கொடுத்த ஒரு தமிழர் தலைவரை இங்கே காட்ட முடியுமா...?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இந்த கேள்விக்கு பதிலை நேரடியாக பார்க்கும் முன்பு வரலாற்றை சற்று நேர் செய்வோம்.

வருடம் 1965

தமிழ் தேசியத்தின் ஒரு பகுதியாக தமிழக மாணவர்களால் தன்னிச்சையாக எழுந்த போராட்டம் 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'. உண்மையில் அது தமிழருக்கான ஒரு தமிழ் தேசிய இனப் போராட்டம். தமிழர் என்ற ஒரு தேசிய இனத்தை மதித்து நடக்காத இந்திய அரசை எதிர்த்து தமிழக மாணவர்கள் தன்னிச்சையாக கொதித்து எழுந்தனர். மேலே சொன்ன போராட்டத்தில் பெரியாரோ, திராவிட கட்சிகளோ எந்த அக்கறையும் காட்டியது இல்லை. ஆனால் அவர்கள் தான் அனைத்தையும் செய்தார்கள் என்றும், 'இனப்போராட்டம்' என்பது 'மொழிப்போராட்டமாக' சுருக்கப்பட்டு காயடிக்கப்பட்டதும் இதே திராவிடர்கள் தான் என்பதும், நோகாமல் நொங்கு தின்பதை போல, போராட்டத்தில் பெரிதும் பங்கு ஆற்றாமலேயே, அதன் பலன் மொத்தத்தையும் அனுபவித்து ஆட்சிக்கு வந்ததும் இதே திராவிட கயவர்கள் தான் என்பதையும் சற்று ஆதாரங்களுடன் பார்ப்போம்.

சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு பேரணி -- இந்து நாளிதழ்

பெரியாரின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை
* இந்தி போராட்டத்தை எதித்த பெரியார் தான், தமிழகத்தில் ராஜாஜிக்கு முன்பாகவே  இந்தியை கொண்டு வந்தவர் என்பதும்,அதை போற்றி வளர்த்தவர் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?
"இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே"  -- "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436

* பின்பு இதே பெரியார் தான், பெருவாரியான பிராமணர்கள் இந்தியை கற்று பயின்று இருக்கிறார்கள் என்பதால், பிராமணர்களை எதிர்க்கும் பொருட்டு இந்தியை எதிர்த்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

* ஆக, ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழுக்கோ,தமிழருக்கோ நன்மை பயக்கும் என்ற பதத்தில் பெரியார் செயல்பட்டதே இல்லை என்பதும், இந்திக்கு மாறாக அவர் 'ஆங்கிலத்தை தான்' முன் வைத்தார், செயல்படுத்தினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
Source: http://newindian.activeboard.com/t44595205/topic-44595205/?sort=oldestFirst&page=2

என்றுமே ஆங்கிலத்துக்கு ஆதரவாக நின்று இந்தியை எதிர்ப்பது என்னும் திராவிடர் கழக நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழுக்கென்று - தமிழர் சார்பாக - நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பெரியார் 'காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து' நடக்கும் போராடம்மாக வர்ணித்து கொச்சை படுத்தினார்.
"இந்தியைத் திணிப்பதில்லை என்று அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக் கண்ணீர்த்துளிகள் (திமுக) செத்த பாம்பை (இந்தி எதிர்ப்பு) எடுத்து ஆட்டுகின்றனர்".கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

என்று 1965 ஜனவரி 19 அரகண்டநல்லூரில் பேசினார். இப்படி 'வெறும் வாயை மட்டும் மெல்லுங்கள், போராட்டம் கீராட்டம் எல்லாம் வேண்டாம்' என்று தமிழருக்கு பொல்லாத அறிவுரை வழங்கினார் பெரியார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாகதமிழனுக்கே உரிய போராட்ட குணத்தால் வரலாற்று சிறப்புமிக்க அந்த போராட்டம் வெடித்தே விட்டது. விளைவாக இந்திய வான்படைகள் தமிழரின் மீது பெரியார் இனப்போரையே தொடுத்தன. பல உயிர்கள் செத்து விழுந்தன.

ஈழ விடுதலை விசயத்தில் பெரியார் இன்னும் மோசம். தந்தை செல்வாவிடம் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்று சப்பை கட்டி அனுப்பி விட்டார் தமிழக அரசிலில் தனித்து பார்க்க முடியாத சக்தியாக பெருமையோடு பேசப்படும் பெரியார்.

திமுகவின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை
திமுக தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிகப்பெரிய அடக்குமுறையை இந்திய அரசு ஏவி விட்டது.அன்று எழுந்த மாணவர் போராட்டம் கண்டு அரண்டு போன திமுக, பின்வாங்கியது. அந்த இயக்கமும் ஆங்கிலத்துக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதே அன்றி தமிழுக்காக அல்லவே! இந்த நிலையில், அம்மாபெரும் மொழிப்போரில் பெரிதாகப் பங்கெடுக்காமல் அந்த கழகம் ஒதுங்கியே நின்றது.

அண்ணா தம்முடைய உண்மை உருவத்தைக் காட்டி விட்டார்! அம் மொழிப்போருடன் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்று அறிக்கை விடுத்து திமுக வின் கயமைக்கு கட்டியம் சொன்னார். அம் மொழிப்போரை கைவிடுமாறு 10.2.1965 அன்று மாணவர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதை கண்டு பெரியார் "பூனை கோணியில் இருந்து வெளிவந்துவிட்டது" என்று சொல்லி நகையாடினார்." -- கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

இறுதியில் உயிர்கள் பல செத்து விழுந்தாலும், தமிழுக்கென்று போராடாமல், பின்வாங்கிய திமுக, செத்த உயிர்களின் மீது முதன் முறையாக 1965 இல் ஆட்சி அமைத்தது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது:
இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் மொழிந்த திராவிடர்கள், தமிழருக்காக தமிழரால், தமிழை முன்னிறுத்தி தன்னிச்சையாக எழுந்த தமிழ் தேசிய சின்னமான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தங்கள் கயமைத் தனத்தால் தனது அரத பழசான 'இந்திக்கு மாற்றான ஆங்கிலம்' என்று திசை திருப்பி, தமக்குள்ள அரசியல் செய்து தமிழ் தேசிய எழுச்சியை அடக்கினர். இதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை எந்த திராவிட இயக்கத்திலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இளைங்கர்கள் இல்லாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

வருடம் 2013

சமீபத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், ஈழத்துக்காக ஒரு பெரு நெருப்பு 'லயோலா' கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு அது தமிழ் நாடு முழுவதும் பற்றி கொண்டது. இதை பார்த்து ஆளும், எதிர் கட்சிகள் அரண்டு தான் போயின. ஆளும் கன்னட ஜெயலலிதா அம்மையாரின் அரசோ, 'இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, 'அது தீர்மானமாக மட்டுமே இருக்க வேண்டும், செயல் வடிவம் பெற்றுவிட கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். விளைவு அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை அறிவித்தார். அனைத்து கல்லூரி விடுதிகளையும் மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவர்களின் எழுச்சியை அடக்க தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.


தமிழருக்கான நாடுகேட்டு மாணவர்கள் போராட்டம் (2013)

ஆனால் எதிர் கட்சியை இருக்கும் விஜயகாந்த் அரசோ, அதற்க்கு அடுத்து இருக்கும் தெலுங்கர் கருணாநிதி அரசோ இதை வைத்து வேறு ஒரு அரசியல் நாடகம் ஆடியது. மாணவர்களின் உண்மையான போராட்டம் 'ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்' என்பதே. இதை பல முறை, அனைத்து மாணவர்களும் 'புதிய தலைமுறை' உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக ஆணித்தரமாகவே வலியுறுத்தினர். ஆனால், திராவிட ஊடங்கங்கள் 'அமேரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று போராடுவதாக அயோக்கியத்தனமாக செய்தியை திரித்து வெளியிட்டனர். இதன் மூலம் தங்களின் இந்திய (திராவிடர்களின் பாணியில் சொன்னால் ஆரிய பாசம்) பாசத்தை மறைமுகமாக வலியுறுத்தினர். இதன் மூலம் 'மாணவர்களின் ஈழ நாடு' கோரிக்கை என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டது.
Source:http://tamil.oneindia.in/news/2013/03/24/tamilnadu-arts-colleges-re-open-tomorrow-172079.html

வைகோ நல்லவர்தானே...?
* சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள இராணுவ மயமாக்கலையும் எதிர்க்கும் வைகோவுக்கு இங்கே பல நூறு ஆண்டுகளாக தெலுங்கர்களின் குடியேற்றமான பாளையங்களும், தெலுங்கர்களின் இராணுவ மயமாக்கலின் வடிவமாக அவை இன்றும் தமிழருக்கு எதிராக அதே பெயரில் வழங்கி வருவதும் தெரியாதா...? அதை அவர் எதிர்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் அதை வெளியில் சொல்லி இருப்பாரா...? ஏன்? ஊருக்கு மட்டும் உபதேசமா?

* ஈழத்தில் ஒரு தமிழனை தலைவராக நிறுத்தும் போது, தமிழகத்தில் திராவிடனை ஏன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படை கேள்விக்கு பதில் சொல்வாரா..?

* விஜய நகர பேரரசு தொடங்கி இன்று வரை தமிழனை மொட்டை அடிப்பது தெலுங்கர்களான திராவிடர்கள் தான் என்று உண்மை தெரிந்தும், வைகோ  அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்கத் தான் வேண்டுமா?

* எந்த தமிழன் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் சாதி கட்சி என்றும், எந்த தெலுங்கர் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் முற்போக்கு கட்சி என்று சொல்லும் திராவிட ஊடங்கள், 'வைகோ போன்று தமிழனுக்கு உழைத்த ஒரு தமிழனை காட்டு பார்ப்போம்' என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா? முதலில், தமிழனுக்காக தமிழன் போராட இங்கே தமிழ் நாட்டில் களம் இருக்கிறதா? ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்றாம் நான்காம் கட்சி என்று எல்லாருமே தெலுங்கர்கள் நிரம்பி இருக்க, எமக்காக யாம் எங்கே போராடுவது?

விஜயகாந்த் உள்ளிட்ட தெலுங்கர்கள் குறித்து பாரதி ராஜா
"இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனா, தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க? கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க.ஆனா, தமிழ்நாட்டுல? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே... கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க. தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!''"
Source: http://tamil.oneindia.in/movies/news/2013/06/bharathirajaa-s-attack-on-vijayakanth-177987.html




தமிழரை வீழ்த்திய காலம் தொட்டு, இன்று வரை நேரடியாகவும், திராவிடம் என்று மறைமுகமாகவும் தெலுங்கர்களும்,கன்னடர்களும் நம்மை அடிமை படுத்தி ஆண்டு கொண்டு இருக்கின்றனர். எனவே வைகோ போன்ற தெலுங்கர்கள், ஈழத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடும், அதற்க்கு அவனே தலைமையும் இருக்க வேண்டும் என்று போராடுவது உண்மை என்றால், தமிழ் நாட்டிலும் அதையே அவர் வழிமொழிய வேண்டும். மற்றபடி வைகோ ,திராவிடத்தை விடுத்து எமக்காக போராடும் தெலுங்கர் இன தோழராக இருக்கலாம். தலைவராக ஆக முடியாது. மீண்டும் மீண்டும் தெலுங்கரிடம் ஆட்சியை கொடுத்து அடிமைப்பட தமிழர்கள் தயார் இல்லை.

எனவே தமிழனுக்கேன்று ஒரு நாடு அமைவதையோ, அவனுகென்று ஒரு அடையாளம் இருப்பதையோ எதிர்க்கும் முதல் எதிரிகளே திராவிடர்கள் தான். இவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று பகல் கனவு காணும் மூட தமிழர்களே.....இனிமேலாவது திருந்துங்கள்....!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்