15 November 2013

தமிழர் vs திராவிடர் - 2

உரையாடல் 2 
தமிழர்:  ஈழத்தில் தான் 60 ஆண்டுகால போராட்டம், ராஜபக்ஷே போன்ற சிங்கள நல்ல உள்ளங்களால் அடக்கப்பட்டு விட்டது. மேலும், அங்கு ஜனநாயகமும் திரும்பி வந்து விட்டது. தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த விக்னேஸ்வரன் அவர்கள் மாகாண முதல்வராகவும் ஆகி விட்டார். இத்தனை நடந்த பிறகும், அங்கு அமைதி திரும்பிய பிறகும் இங்கே தமிழ் நாட்டில், ஈழத்தை பற்றி குரல் கொடுக்கும் அமைப்புகள், குறிப்பாக திராவிட அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் ஏன் மீண்டும் மீண்டும் 'தமிழ் ஈழம் தான் தீர்வு' என்றும், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர் வாழ இயலாது என்றும் சொல்கிறீர்கள்? இது மோசடி அல்லவா...? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

திராவிடவாதி: புலிகள், தமிழர்கள் தோற்று விட்டார்கள் என்பதற்காக, 60 ஆண்டுகால போராட்டத்தை தூக்கி எறிந்துவிட சொல்கிறீர்களா..?

தமிழர்: தடங்கலுக்கு மன்னிக்கவும். இலங்கையை பொருத்தவரை தமிழ் மன்னர்களே பெரும்பாலான சிங்கள மன்னர்களை அடக்கி ஆண்டு உள்ளனர். மேலும், முதல் மூன்று ஈழப்போர்களிலும் புலிகளே வெற்றி பெற்று உள்ளனர். எனவே வரலாற்றில் பலமுறை தோல்வியை சந்தித்துள்ள சிங்களன், இந்த முறை தமிழனை வீழ்த்தி உள்ளான். இது தவறு என்றால், தமிழ் மன்னர்கள் செய்தது மட்டும் சரியா...? எதற்கு தேவை இல்லாமல் 60 ஆண்டு கால வரலாறு பேச வேண்டும்?

திராவிட வாதி: 'அதுக்கு இது சரியாகி விட்டது' என்று இதை அப்படியே விட்டுவிட முடியுமா...? அப்படி என்றால் 'வெற்றி பெற்ற சிங்களனுக்கு, தமிழர்கள் இனி அடிமையாகத் தான் வாழ வேண்டும்' என்று சொல்கிறீர்களா..?

தமிழர்: அடிமையாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லையே. அது தான் அங்கு ஜனநாயகம் திரும்பி விட்டதே? நீங்கள் சொல்லும் ஈழ பகுதியில் பிள்ளையானும், கருணாவும், டக்லஸ் தேவானதாவும், இன்று விக்னேஸ்வரனும் தானே ஆள்கிறார்கள். ஆக, தமிழர் பிரதேசத்தை ஜனநாயக முறையில் தமிழர்கள் தானே ஆள்கிறார்கள். அப்புறமும் ஏன் இங்கு நீங்கள் 'ஈழமே இறுதி தீர்வு' என்று பிரிவினை வாதம் பேசி குழப்பம் விளைவிக்கிறார்கள்?

திராவிடவாதி: சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை கொன்று விட்டு, வடக்கில் விக்னேஸ்வரனை தேர்ந்தெடுத்தது என்பது உலகத்தை ஏமாற்ற சிங்களன் நடத்தும் நாடகம். இதனால் தமிழர்களுக்கு விடிவு ஏதும் வரப்போவது இல்லை. மேலும் நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள், சிங்களனுக்கு சோரம் போனவர்கள். அவர்களை தலைவர்களாக கருத இயலாது.

தமிழர்: அப்படி என்றால், 60 ஆண்டுகால வரலாறை மறக்க முடியாது என்று சொல்கிறீர்கள். ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கிறீர்கள். ஜனநாயகம் என்ற பெயரில் அங்கு தமிழர்கள் ஆள்வது என்று சிங்களன் சொல்வது நாடகம் என்று சொல்கிறீர்கள். சரி தானே?

திராவிடவாதி: ஆமாம்.

தமிழர்: நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டுமே. அதனால் தமிழர்களுக்கு ஏதும் தீமையா என்ன? இது நாள் வரை புலிகளுக்கும், சிங்களனுக்கும் மத்தியில் நடந்த போரில் தமிழ் மக்கள் நிலையற்ற வாழ்வை வாழ்ந்தார்கள். அதனால் என்ன? இப்போது தான் புலிகள் வீழ்த்தப்பட்டு, போலி ஜனநாயகம் என்ற ஒன்றாவது வந்து விட்டதே? தமிழ் மக்கள் இனி உயிர் பயம் இன்றி நிம்மதியாக வாழ்வார்கள் தானே? அப்படியே தொடரட்டுமே? ஏன் 'ஈழமே இறுதி இலக்கு' என்று நீங்கள் இங்கே கூச்சல் போட வேண்டும்?

திராவிடவாதி: சிங்களனின் அதிகாரத்தில் இருக்கும் இன்றைய பொம்மை ஈழ தமிழர் அரசு தொடர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தமிழர்: தெரியாது சொல்லுங்கள்.

திராவிடவாதி: 1. தமிழர் பெண்களை சூறையாடியது போல, தமிழர் நிலங்களை சிங்களன் சூறை ஆடுவான். அதற்க்கு தான் விக்னேஸ்வரனுக்கு 'காணி அதிகாரம்' தரப்படவில்லை.
2. தமிழர் பகுதியில் போர் முடிந்தும் நிறுத்தப்பட்ட சிங்கள இராணுவம், அவர்களுக்கு உதவிய சிங்கள கைக்கூலி தமிழர்களின் துணையுடன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவான். இதன் மூலம் எந்த காலத்திலும் தமிழர்கள் எழுச்சி பெறக்கூடாது என்பதுடன், ஊர் உலகை ஏமாற்ற தங்களின் கைக்கூலி தமிழர்களுக்கு ஆட்சியையும், அதிகாரத்தையும் கொடுத்து,தன்னால் வீழ்த்தப்பட்ட தமிழர்களை ஆள செய்வான். தமிழர் ஆட்சி தான் அங்கு நடக்கிறது என்பது போல சித்தரிப்பான்.
3. தமிழ் பண்பாடும், கலாச்சாரம்,அடையாளம் என அனைத்தையும் சீரழிப்பான். கோவில்களை இடிப்பான். கோவில் சொத்தை கொள்ளை இடுவான். அதற்க்கு 'ஏற்றுக்கொள்ளும்படி' பல காரணங்களை சொல்வான்.
4. தமிழர்களை பிச்சைகாரர்கலாக ஆக்குவான். தங்களுக்கு பயன்படும் வெறும் ஓட்டு எந்திரங்களாக மட்டுமே அவர்களை பயன்படுத்துவான்.

தமிழர்: மிக்க நன்றி. நீங்கள் சொன்னவற்றுடன் சேர்த்து நாங்களும் கொஞ்சம் என்ன நடக்கும் என்று ஊகித்து உள்ளோம். கொஞ்சம் சரி பார்த்து சொல்லுங்களேன்.

திராவிடவாதி: சொல்லுங்களேன்.

தமிழர்: 1. அவனே கல்வி,தொழில்,பொருளாதாரம் என்று கொடி கட்டி பறப்பான். தமிழ் நிலத்தில் சிங்களன் கட்டும் கல்வி மய்யங்களில் தான் நாளை தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டி இருக்கும். 
2. தான் வீழ்த்திய தமிழர்களை தன்னால் 'தாழ்த்தப்பட்டோர்' என்று பொருள் படும்படி, 'தாழ்த்தப்பட்டோர்' என்று குறிப்பிடுவான்.
3. தனக்கு தோதான சிங்கள, தமிழ் அமைப்புகளை, நபர்களை தனது அருகில் வைத்து கொண்டு, அவர்களை வைத்தே அரசியல் செய்வான்.
4. தமிழர் என்று சொல்லையே அருவருப்பான சொல்லாக மாற்றுவான். 
5. தன்னால் வீழ்த்தப்பட்ட தமிழர்களுக்கும், தனக்கு தோதான தமிழர்களுக்கும் இடையே என்றைக்குமே பகை இருக்கும்படி செய்வான். அதன் மூலம் தன்னை யோக்கியனாக காட்டிக் கொள்வதோடு, தமிழர்கள் தன்னை பற்றியே நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன், தனது அரசியலை தடையின்றி செய்வான்.
6. நிலம்,நீர்,காற்று என தமிழர் பிரதேசத்தின் வளங்களை ஜனநாயக அடிப்படையில் கொள்ளை அடிப்பான். அதற்க்கு தோதாக சாரை சாரையாக தங்களது குடியேற்றங்களை தமிழர் பிரதேசங்களில் அமைத்து கொள்வான்.
7. சுமார் 500 வருடங்கள் கழித்து, தமிழர்களுக்கு தானே தலைவர் என்று சொல்வான். 'தமிழர்களை வீழ்த்திய, இன்றும் அவனை அடக்கி ஆண்டு கொண்டு இருக்கும் நீ எப்படி தமிழனுக்கு தலைவர் ஆக முடியும்' என்று யாரவது விளக்கமாக கேட்டால், 'யார் தமிழர்? அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது' என்று சிங்களர்களை வைத்தே பதில் சொல்ல வைப்பான்.

திராவிடவாதி: இதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா?

தமிழர்: அதை தொடர்ந்து படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். இதுவரை நீங்கள் கொடுத்த பதில்களின் அடிப்படையில் நாங்கள் சில கேள்விகளை முன்வைக்கிறோம். நீங்கள் பதில் சொல்கிறீர்களா?

திராவிடவாதி: கேளுங்கள்.

தமிழர்:
ஈழத்தில் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக 60 ஆண்டுகால போராட்டத்தை, அதன் வரலாற்றை பற்றி மறந்துவிட வேண்டுமா என்று நீங்கள் எங்களை பார்த்து கேட்டீர்கள். மேலும், தமிழ் மன்னர்களுக்கும், சிங்கள மன்னர்களுக்கும் நடந்த போர்களை வைத்து, இன்று ஈழத்தில் ராஜபக்ஷேவின் 'இன அழிப்பை' நியாயப்படுத்த கூடாது என்றும் சொல்ல முற்பட்டீர்கள். அப்படி என்றால்,
கேள்வி 1: தமிழகத்தில் தமிழர்கள், வடுகர்கலான விஜயநகர நாயக்கர்களிடம் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக 500 வருட வரலாற்றை மறந்துவிட வேண்டும் என்று நீங்கள் சொல்வது நியாயமா?

கேள்வி 2: மூவேந்தருக்கும், வடுக நாயக்கருக்கும் நடந்த போரை வைத்து, கடந்த 500 வருடங்களாக தமிழகத்தில் நடக்கும், நடந்து கொண்டு இருக்கும் 'தமிழின அழைப்பை' நியாயப்படுத்த கூடாது என்று நாங்கள் சொல்வது உங்களுக்கு ஏன் முரணாக படுகிறது?

கேள்வி 3: வெற்றி பெற்றுவிட்டான் என்பதற்காக தமிழர்கள் போலி ஜனநாயகம் என்ற பெயரில் சிங்களனுக்கு அடிமையாக இருக்க கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் இதையே தமிழகத்தில் வடுக திராவிட அரசு தமிழர்களை வீழ்த்தி வெற்றி பெற்று விட்டான் என்பதற்காக, திராவிடம் என்ற பெயரில் எங்களை அவர்கள் அடிமையாக நடத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். திராவிடமே தமிழர்களுக்கு முதல் எதிரி என்று சொல்கிறோம். இதில் மாற்றுக்கருத்து உண்டா?

கேள்வி 4: தமிழர்களாகவே இருந்தாலும் சிங்கள பேரினவாதத்துடன் சோரம் போன தமிழர்களை நீங்கள் 'தமிழரே அல்ல' என்று சொல்லும் போது, தமிழர்களை வீழ்த்திய வடுக திராவிட வாரிசான வைகோ போன்றவர்களை, தமிழகத்தில் தலைவராக ஏற்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்? ஈழத்தை தமிழர்கள் ஆள வேண்டும் என்று சொல்லும் நீங்கள், தமிழகத்தில் ஒரு வடுக தெலுங்கரை தலைவராக முன்னிறுத்த நினைப்பது ஏன்?

கேள்வி 5: ஈழத்தில் நடப்பது ஆட்சியே அல்ல, அது போலி ஜனநாயகம் என்று சொல்லும் நீங்கள் இதே நாங்கள் இங்கு தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல, திராவிடம் என்ற போர்வையில் போலி ஜனநாயகமும், இன அழிப்பும் என்று சொன்னால் மட்டும் ஏன் கோவம் வருகிறது உங்களுக்கு?

கேள்வி 6: ஒரு லட்சம் தமிழர்களை கொன்ற சிங்களத்துடன் தமிழர்கள் அனைத்தையும் மறந்து, அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதை கடுமையாக மறுக்கும் நீங்கள், இதே போல தமிழர்களை 'கயத்தாறில்' சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கொன்று ஒழித்த திராவிடத்துடன், அனைத்தையும் மறந்து, அவர்களின் தலைமையை தமிழகத்தில் மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? 

கேள்வி7: இதே போலி ஜனநாயகம் ஈழத்தில் தொடர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று நீங்கள் சொன்னதோடு, நாங்கள் சொன்னதும் தான் இன்றும் தமிழகத்தில் திராவிடர்களின் ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறீர்களா?அத்துடன் மூவேந்தரின் ஆட்சி முடிவுக்கு வந்து இன்று வரை வடுக நாயக்கரின் ஆட்சியே தமிழகத்தில் நடக்கிறது என்று சொன்னால், அந்த உண்மையை மூடி மறைக்க, இங்கே ஆள்பவர்களையும் நீங்கள் தமிழர்களாக சித்தரிக்க முயல்வது ஏன்?

கேள்வி8: சில நூறு வருடங்கள் கழித்து,தமிழர் என்று சொன்னாலே அது பிற்போக்கு சிந்தனை என்றும், அப்படி பேச ஆரம்பித்தால் தன்னுடைய குட்டு எல்லாம் வெளிப்பட்டு விடும் என்று சிங்களன் எப்படி அச்சப்படுவானோ, அதே போலவே இங்கு தமிழகத்திலும் திராவிடம் பேசி,அரசியல் செய்பவர்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். இதற்க்கு மாற்றுக்கருத்து உண்டா?

<<< திராவிடர்கள் பதில் சொல்லலாம் >>>

தமிழர் vs திராவிடர் - 1

உரையாடல் 1

தமிழர்:   "தமிழ் நாட்டை தமிழரே ஆள வேண்டும்."
திராவிடவாதி: "யார் தமிழர்? அவனுக்கான வரையறை என்ன? தமிழர் என்ற ஒரு இனமே கிடையாதே?"
தமிழர்: தமிழர் என்ற ஒரு இனமே கிடையாது என்றால், தமிழர் என்பவரை வரையறுக்க முடியாது என்றால், நீங்கள் 'ஈழத்தை தமிழரே' ஆள வேண்டும் என்று சொல்கிறீர்களே, 'ஈழமே அதற்க்கு தீர்வு' என்று சொல்கிறீர்களே அப்படி என்றால் நீங்கள் எந்த தமிழருக்காக போராடுகிறீர்கள்?"
திராவிடவாதி: அது வந்து.......உணர்வுள்ள தமிழர்களுக்காக போராடுகிறோம்....அவர்களே ஆள வேண்டும் என்று சொல்கிறோம்....
தமிழர்: உணர்வுள்ள தமிழரை எப்படி அடையாளம் காண்பது? ஒருவனுக்கு இன உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அளபப்து?
திராவிடவாதி: இந்த இனத்திற்காக ஏதாவது ஒருவகையில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். உதாரணமாக இங்கிருக்கும் மக்களுக்கும், ஈழ மக்களுக்கும் குரல்கொடுப்பது, போராட்டம் நடத்துவது, முடிந்தால் களத்தில் கூட நிற்பது, சிறை செல்வது போன்றவை.
தமிழர்: நீங்கள் சொல்லும் அனைத்தையும் செய்தல் அவர் தமிழர் ஆகிவிடுவாரா...? அப்படி என்றால் தமிழருக்காக குரல் கொடுக்கும் 'டக்லஸ் தேவானந்தாவை' நீங்கள் எதிர்ப்பது ஏன்? தமிழருக்காக உயிரை நீத்த சிங்கள எழுத்தாளரின் வாரிசை நீங்கள் ஈழத்தமிழருக்கு தலைவராக அறிவிப்பீர்களா...? தமிழருக்காக சிறை சென்றால் அவரும் தமிழர் தான் என்றால், சரத் பொன்சேகா உங்களின் வரையறை படி தமிழர் தானே...? காரணம், ராஜபக்ஷேவுக்கும் பொன்சேகாவுக்கும் பிணக்கு வந்தபோது ஈழத் தலைவர்கள் பலர் பொன்சேகாவுக்கு ஆதரவு அளித்தனரே....? ஆக, நீங்கள் சொல்லும் உணர்வுள்ள தமிழர் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிகிறது. சொல்லுங்கள். ஈழத்தில் எந்த தமிழருக்காக நாடு வேண்டும் என்று போராடுகிறீர்கள்? ஆக தமிழர் யார் என்றே வரையறுக்க தெரியாமல் உள்ள நீங்கள், ஈழத்தை தமிழர் ஆள வேண்டும் என்று சொல்லும் பின்னணியை கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன். 

திராவிடவாதி: < இந்த கேள்வி இன்னும் அப்படி உள்ளது. தெரிந்தவர்கள் பதில் சொல்லலாம்>

07 November 2013

தமிழருக்கான அரசியலின் அடிப்படை

அரசியல் அடிப்படை
குறிப்பு: தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைகல் போல, இந்த 'அரசியல் அடிப்படை' என்ற கருவியை உங்கள் முன் 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்' வைக்கிறது. இது புது கருத்து ஒன்றும் இல்லை. ஏற்க்கனவே பலருக்கு தெரிந்தது தான். ஆனால், பொது வாழ்க்கையில் நுழைய விரும்பும் எவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை இவை என்பதால் விரிவாக பகிர்கிறோம். இந்த கருவியை கொண்டு உலக அளவில் நடக்கும் அரசியலை நீங்கள் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது மட்டும் இன்றி, இங்கே குறிப்பாக தமிழர் அரசியல், ஈழத்தமிழர் அரசியல் என்று அரசியல் செய்வோர்கள் நல்லவர்களா, தீயவர்களா,அப்பாவிகள் என்றும் உங்களால் கணிக்க முடியும். மேலும் நமக்கான அரசியல் பாதை என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா என்றும், இருக்கிறது என்றால் எது, இல்லை என்றால் எப்படி உருவாக்குவது என்றும் இந்த கட்டுரை ஒரு சிறு வெளிச்சத்தை தரும் என்று நம்புகிறோம்.



பொதுவாக நாகரிக மனித சமூகத்தை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். (குறிப்பு: இவை பொருளாதாரம் என்ற ஒன்றை மட்டும் வைத்து அளக்கப்படுவது இல்லை. சமூக பங்களிப்பு என்பதை பொறுத்தவை இந்த வர்க்கங்கள்.).

1. அதிகார வர்க்கம்  (சுமார் 2%)

2. நடுத்தர வர்க்கம் (சுமார் 60-75%)

3. பாட்டாளி வர்க்கம் (சுமார் 25-30%)



பாட்டாளி வர்க்கத்தின் குணநலன்
> அப்பாவிகள், எளிதில் ஏமாறுபவர்கள்/ஏமாற்றப்படுபவர்கள்
> அன்றாடம் காய்ச்சிகள்
> அடிமட்ட அரசியல் தொண்டர்கள்
> சதுரங்கத்தில் சிப்பாய்கள் போல களம் இறக்கப்படுபவர்கள்,முதலில் களப்பலி ஆகுபவர்கள்
> அதிகார வர்கத்தால் பயன்படுத்தப்படுபவர்கள்.
> தொலைநோக்கு சிந்தனையோ, அரசியல் அறிவோ, தன்னை சுற்றி நிகழும் நிகழ்வுகளையோ அறிந்து வைத்திருக்காத பாமரர்கள்
> புரட்சியையோ, கிளர்ச்சியையோ,சமுதாய மாற்றமோ நடை பெற வேண்டும் என்றால் கூட இவர்களால் தன்னிச்சையாக செய்ய முடியாது. அதற்க்கும் இவர்கள் நம்பி இருப்பது அதிகார வர்க்கத்தை தான்.

நடுத்தர வர்கத்தின் குணநலன்
> காய்ச்சல் வருவதற்கு முன்பு மருந்து சாப்பிடும் பொதுமக்கள்.
> கருத்தியலை பின்பற்றுபவர்கள். அந்த கருத்தியல் உம் (திராவிடம்,இந்து மதம், சாக்கியம்) போல எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் அதை பின்பற்ற மட்டுமே செய்யும்
> தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்பவர்கள்.
> அதிகார வர்க்கத்தால் மறைமுகமாக பாதிக்கப்படுபவர்கள்.
> அதிகார வர்க்கம் என்ன கெடுதல் செய்தாலும் அதை தாங்கி அதற்க்கு தகுந்த மாதிரி வாழப்பழகியவர்கள்.
> கிளர்ச்சி,புரட்சி,சமூக சிந்தனை,மாற்றம் என்று எதை பற்றியும் அலட்டிகொள்லாதவர்கள்.
> இவர்களால் அதிகார வர்க்கத்துக்கு எந்த காலத்திலும் பாதிப்பு இல்லை.

அதிகார வர்க்கம்
> இந்த 2% மட்டுமே உள்ள இவர்கள் தான் மீதம் இருக்கும் 98% நடுத்தர வர்க்கமும், பாட்டாளி வர்க்கமும் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவர்கள் என்ன உடுத்த வேண்டும், என்ன படிக்க வேண்டும், என்ன உண்ண வேண்டும், இன்னும் சொல்லப்போனால் 98% மக்கள் உயிர் வாழ வேண்டுமா வேண்டாம் என்பதை கூட இந்த 2% அதிகார வர்க்கமே முடிவு செய்யும்.
> ஒட்டுமொத்த உலக அரசியலிலும் இந்த 2% அதிகார வர்க்கத்தின் ஒவ்வொரு அசைவுகளும் தான் இந்த உலகத்தின் தலை எழுத்தையே தீர்மானிக்கிறது.
> இந்த அதிகார வர்கத்தில், கீழ்க்கண்ட வகையான நபர்கள் உள்ளனர்.

* கருத்தியலை உருவாக்குபவர்கள்
* அந்த கருத்தியலை வலுவாக அடியொற்றி அரசியல் செய்பவர்கள்
* முதலாளிகள், தொழில் வல்லுனர்கள்
* மக்கள் வெகுஜன ஊடக உரிமையாளர்கள்
* கொள்கை வகுப்பாளர்கள்
* பரவலாக அறியப்பட்ட அறிவுஜீவிகள்
etc....

எனவே "பொதுவாழ்வில் 98% மக்களுக்கு பயனளிக்கும் வகையில் யார் யாரெல்லாம் செயல்பட நினைக்கிறார்களோ, அவர்களின் இலக்கு அதிகார வர்கத்தில் இடம் பிடிக்க முயற்சிப்பதே" ஆகும். மற்றபடி வேறெந்த வர்கத்தை குறிவைத்து நாம் நகர்ந்தாலும், அந்த போராட்டமும், முயற்சியும் அப்போதைக்கு தீர்வாக இருக்கலாமே ஒழிய, நிரந்தர தீர்வாக இருக்காது. இந்த அடிப்படை உண்மையை உள்வாங்கி கொண்டு, அதிகார வர்க்கத்தை இன்னும் சற்று நுணுக்கமாக அலசுவோம்.

அதிகார வர்கத்தில் இருக்கும் அனைவருமே நல்லவர்களும் அல்ல, கெட்டவர்களும்அல்ல.
=> அதிகார வர்கத்தில் உள்ள 90% பேர் கிரிமினல்களே.....!!! இந்த கணக்கு எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டில் உள்ள சமூக கட்டமைப்புக்கும் பொருந்தும்
=> மீதம் உள்ள வெறும் 10% பேர் மட்டுமே மற்ற அனைவரை காட்டிலும் நேர்மையானவர்கள். இந்த 10 சதவீத அதிகார வர்க்கத்தால் தான், இன்றும் உலகம் உருப்படியாக இயங்கி கொண்டு இருக்கிறது.

எப்போதெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட 10% பேரின் கை ஓங்கி, மீதம் உள்ள 90% அதிகார வரகத்தின் கையை விட ஓங்கி இருக்கிறதோ அந்த காலம் தான் வரலாற்றில் பொற்காலம் என்றும், அந்த ஆட்சியையே நல்லாட்சி என்றும் காலம் பதிவு செய்கிறது. 

நிற்க. ஆக தமிழருக்கு தலைமை தாங்க நினைக்கும் எந்த ஒரு தலைமையும்,அமைப்பும் செய்ய வேண்டியது இவையே.

> அதிகார மையத்தை நோக்கியதாக தங்கள் செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
> 10% அதிகார மையத்தில் உண்மையானவர்களாக இருப்பதோடு மட்டும் இன்றி, மீதம் உள்ள 90% சதவீத கிரிமினல் அதிகார வர்க்கத்தை இராஜதந்திர காய் நகர்த்தல்களின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்கவும் செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

சரி. தமிழருக்கு தலைமை தாங்க நினைக்க எவரும் அந்த 10% அதிகார மையத்தில் இடம் பிடிப்பது எல்லாம் சரி. அதை யார் செய்வது எப்படி செய்வது?. அதை பார்க்கும் முன்பு, ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும் உலக வரலாற்றில் எப்படி தங்கள் இலக்கை அடைய காய் நகர்த்தினார்கள் என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.

1.அதிகார வர்க்கம் கருத்தியலை உருவாக்கும்
2.அந்த கருத்தியலை பரப்புரை செய்யும்
3.அந்த கருத்தியல் ஒட்டி, பாட்டாளி வர்க்கத்தை தனக்கு தேவையானபடி ஒருங்கிணைத்து பயன்படுத்திக் கொள்ளும்.

உதாரணம்#1: (கிரிமினல் அதிகார வர்க்க சிந்தனை)
1.மாக்ஸ் முல்லர் ஆரிய கருத்தியலை உருவாக்குகிறார்.
2.அதை அவர் தொட்டு பலரும் பரப்புரை செய்கின்றனர்.
3.அந்த ஆரிய கருத்தியலை ஒட்டி பிராமணர்கள்,இந்து மதத்தையும் இந்தியாவையும் கட்டி எழுப்புகின்றனர்.பாட்டாளி வர்க்கத்தை 'இந்து' மடத்தை காக்க பயன்படுத்துகின்றனர்.

அப்படி என்றால் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் செய்ய வேண்டியது 'பிராமணாள் கபே'வை உடைப்பது அல்ல. மாக்ஸ் முல்லரை, அவரின் ஆரிய கருத்தியலை உடைக்க வேண்டும்.

உதாரணம்#2 (மக்களுக்கான சிந்தனை)
1.புத்தர் 'ஒடுக்கப்பட்டோருக்கான மீட்சி' என்ற கருத்தியலை உருவாக்குகிறார். அதனை ஒட்டி 'புத்த மதம்' தோற்றுவிக்கப்படுகிறது.
2.அதை பலரும் பரப்புரை செய்கின்றனர்.
3.பின்பு புத்தமதம் பாட்டாளி மக்களை ஒருங்கிணைத்து, கிளர்ந்து வளர்ந்தது.

அப்படி என்றால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்க நாம் செய்ய வேண்டியது இவை தான். இதற்க்கு சற்று காலம் பிடிக்கும். ஆனால் கண்டிப்பான வெற்றியை இனி வரும் அனைத்து தலைமுறைக்கும் தரும் என்று நம்புகிறோம்.

1. தமிழருக்கான கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும். அந்த கருத்தியலில் யார் தமிழர், என்ன அவர்களின் தேவை என்பவை தெளிவாக குறிப்பிட பட வேண்டும். மிக விரிவாக அலசி ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். (உம்: 'தமிழர் அரசு' என்பது தமிழருக்கான ஒரு கருத்தியல்).
2. தமிழருக்கான கருத்தியலுக்கு எதிர் கருத்தியல்கள், சிந்தனைகள் அனைத்தும் உடைக்கப்பட வேண்டும். (உம்: தலித்தியம்,திராவிடம்,ஆரியம்)
3. தமிழருக்கான கருத்தியல் பரப்புரை செய்யப்பட வேண்டும்.
4. மீதம் இருக்கும் 98% மக்களும் அவர்களை அறியாமலேயே இதை பின்பற்ற அவர்களாகவே தொடங்குவார்கள்.
5. அந்த கருத்தியலை ஒட்டி அரசியல் தொடங்கப்பட வேண்டும்.
6. அந்த அரசியல ஒட்டி களம் காணும்போது, கருத்தியலால் ஒருங்கிணைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம், தமிழருக்கான அதிகார வர்க்கத்துடன் கை கோர்த்து இலக்கை அடைய உதவும்.

தமிழருக்கான கருத்தியலை உருவாக்க,விவாதிக்க சக தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

09 July 2013

தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...!!!

கேள்வி: பார்ப்பன அடிவருடிகளான சேர,சோழ,பாண்டியர்களால் தான் தமிழன் தீண்டத்தகாதவன் ஆக்கப்பட்டான். தமிழன் இன்று தலைகுனிய காரணமே ஆரிய பார்ப்பானும், மூவேந்தர்களும் தான். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
பொதுவாக தமிழக வரலாறை பேசும் எவரும், குறிப்பாக திராவிட இயக்கத்தாரும் மூவேந்தர் வரலாறு, ஆரியர் வருகை, பார்ப்பனியம் என்று பேசி விட்டு, ஒரே தாவாக தாவி தமிழக வரலாறை முகலாயர்,ஆங்கிலேயர் என்று கடத்திவிடுவார்கள். இடைப்பட்ட சுமார் 500 வருட வரலாறை அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படி பேசினாலும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அப்படி அந்த 500 வருட இடைப்பட்ட வரலாற்றில் என்ன தான் நடந்தது? அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

அதற்க்கு முன்பு எமக்கு 'ஆரியம்,திராவிடம்,தலித்தியம்' என்ற கருத்தியல்களில் நம்பிக்கை இல்லை என்பதையும், இங்கே யாம் பேசும் ஆரியம்,திராவிடம் அனைத்தும் திராவிட இயக்கங்களின் பார்வையில், அவர்கள் இது நாள் வரை கூறி வந்த விசயங்களின் அடிப்படையிலேயே அலசப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழனை வீழ்த்தியது திராவிடன்(வடுகர்கள்)..!!

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது? இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்? காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்.

* தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா? வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு. இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

* பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல. அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல். மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது. 'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும். அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.
Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

* தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும். குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.

* என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர். சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை. இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும். பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார்,வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.


நாயக்கர் ஆட்சியின் கேடுகள்
* உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு,சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.
* > இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.
> அதுவர இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.
> தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.
> தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.
> அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.
தமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை (Source: Mr.Orissa Balu)

> ஒவ்வொரு பாளையத்திலும் "இனி தமிழன் எழ கூடாது" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இல்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.
> மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.
> 'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.

* பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது. இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.

இதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:
* தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர்,தெலுங்கர்,மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
* தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின்(கன்னடர்,தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது.

மூவேந்தர்கள் யோக்கியர்களா? 

    மூவேந்தர்களை பார்ப்பன அடி வருடி என்றும், இன்றும் தமிழன் தாழ்ந்ததற்க்கு அவர்கள் தான் காரணம் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிட இயக்கத்தினரின் போக்கிற்கு ஒரு உதாரணத்தையும், அவர்களின் பார்வையில் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே பார்க்கலாம். இதன் மூலம் தங்களது 'ஆரிய திராவிட' கருத்தியலை நிலை நிறுத்த மட்டுமே திராவிடர்கள் மூவேந்தர்களை அணுகி உள்ளார்கள் என்றும், அவர்களின் நோக்கம் தமிழன் தாழ்வுற்ற பழியை அனைத்தையும் பார்ப்பனர்களின் மீதும், மூவேந்தர்களின் மீதும் திணிப்பது மட்டுமே என்பதும் தெளிவாக விளங்கும்.

திராவிட பார்வையில் ராஜ ராஜன்
ராஜ ராஜ சோழன் நான்…. -- பாமரன்

மார்க்சிய பார்வையில் ராஜ ராஜன்
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–1  -- ஜெயமோகன்
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2  -- ஜெயமோகன்

இருப்பினும் மூவேந்தர்கள் தொட்டு தமிழ் மன்னர்களின் வாழ்வியலை உலக கண்ணோட்டத்தில் முதலில் அலசுவோம்.

* பல்லவர்களின் காலத்துக்கு முன்பு பிராமணர்கள் என்ற ஒருங்கிணைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது. அந்த அந்த கோவிலில் பூசாரிகள், அந்த அந்த பகுதி கோவிலை பராமரித்தனர். திராவிட இயக்கத்தினர்கள் சொல்வது போல பிராமணர்கள் ஆரியர்களோ, வெளியில் இருந்து வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து வாழ்ந்து, பின்னர் 'ஆரிய கருத்தியலால்' தங்களின் நலம் பேண தங்களை தாங்களே ஆரியர்கள் என்று சொல்லி கொண்டனர். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதற்கும், அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து உதித்தவர்கள் என்பதற்கும் இந்த மரபணு ஆய்வு ஒரு உதாரணம்.



ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

* சாதிகள் என்பது (உண்மையில் சாதி என்ற வார்த்தை தமிழில் இல்லை. சாதி என்பதற்கு பதிலாக இனக்குழு என்றே பயன்படுத்த வேண்டும்) ஆரிய பார்ப்பனர்களால் தமிழ் சமூகத்தில் புகுந்தது இல்லை. அது கைபர்,போலன் கணவாய் மூலம் அவர்கள் இங்கே வந்ததாக திராவிடர்கள் கூறும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழரிடம் இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ளது. எனவே சாதி கட்டமைப்பை உருவாக்கினது தமிழனே. ஆரியன் அல்ல.
உதாரணம்: சிந்து சமவெளி நாகரிகம் என்ற திராவிட நாகரிகத்தில் மக்கள் பிரிவுகள் (சாதிகள்) இருந்துள்ளன.
"Both civilizations, India and China, utilized a feudalistic political system"
"The Indus Valley had a strong centralized government led by a priest king"
Source: 
http://www.studymode.com/essays/Early-Civilizations-Comparison-China-And-The-428024.html
* "The Rise and Spread of Civilization in India and China

* எல்லாவற்றிக்கும் மேலாக நால்வர்ண பிரிவுகள் (fuedal system) என்ற சமூக கட்டமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து நாகரிகங்களிலும் உள்ளது குறிப்பிடத் தக்கது. இதில் இருந்து ஆரிய பிராமணர்கள் தான் தமிழனிடம் சாதியை,நால்வர்ணத்தை விதைத்தார்கள் என்னும் திராவிடர் இயக்கங்களின் கட்டுக்கதை பொய் என்று நிரூபணம் ஆகிறது.

உதாரணங்கள்:



எனவே ஆரியர்கள் வந்தார்கள், அவர்கள் தான் சாதியை கண்டு பிடித்தார்கள், மூவேந்தர்களை கையில் போட்டு கொண்டு தமிழரை அடிமை படுத்தினார்கள் என்ற திராவிடர்களின் கட்டு கதைகள் பொய்யாகி விட்டன. 

அப்படியானால் இந்த நால்வர்ண பிரிவுகள் சரியா என்று நீங்கள் கேட்கலாம். அது அந்த காலத்துக்கு பொருந்தி இருக்கலாம். ஆனால் இந்த காலத்துக்கு அது ஒத்து வராது. இன்னும் சொல்லப்போனால் அந்த நால்வர்ணத்தை யார் உருவாக்கினார்களோ அவர்கள் தான் அதை சரிசெய்யவோ, தூக்கி எறியவோ, அதில் திருத்தம் செய்யவோ வேண்டும். ஆனால், தமிழனை வீழ்த்திய திராவிடர்களிடம்(தெளுங்கர்களிடம்) இந்த பொறுப்பை ஒப்படைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். இத்தனை காலம் சாதி ஒழிப்பு,கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் என்ற போர்வையில் திராவிடர்கள் இங்கே செய்து கொண்டிருப்பது தமிழனை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க கையாண்டு கொண்டிருக்கும் தந்திரம் ஆகும்.

எனவே தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே....திராவிடனே....திராவிடனே....!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

08 July 2013

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்

கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.



"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- குடியரசு இதழில் பெரியார்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு இருந்த 'சென்னை மாகாணத்தில்' இன்றைய ஆந்திர,கேரளா,கன்னடம் போன்றவற்றின் ஒரு சில பிரதேசங்கள் இருந்தன. அப்படி ஒன்றாக இருந்த போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான் அன்றைய BC / SC சாதி பட்டியல்கள். அப்போது MBC கிடையாது. அந்த சாதி பட்டியல்களில் மராட்டியர்,கன்னடர்,தெலுங்கர்,மலையாளி என சகல திராவிட சாதிகளும் இருந்தன.

அப்படி இருந்த அந்த சாதி பட்டியல், மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு தமிழ் நாட்டில் (மற்ற மாநிலங்களை போல) திருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும்? எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா? குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா? இது தமிழ் சாதிகளுக்கு திராவிடர்கள் இழைக்கும் வரலாற்று துரோகத்தின் எச்சம் தானே?

இந்த அயோக்கியத் தனமான சாதி பட்டியலினால் ஒரு குஜராத்தியர் (உம்: சவுராஷ்டிரா) ென்னையில் குடியேறி, அங்கேயே படித்து, தமிழக BC பட்டியலில் வழங்கப்படும் 27 சதேவீத இட ஒதுக்கீட்டால், தனக்கு மருத்துவம்,பொறியியல் என இட ஒதுக்கீட்டை அனுபவித்து கொழிக்க முடியும். எந்த தமிழனாவது இதை குஜராத் மண்ணில் செய்ய முடியுமா? அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா? என்ன அநியாயம் அய்யா இது?

Referrence: 
தமிழக அரசின் இன்றைய சாதி பட்டியல்
http://www.tnpsc.gov.in/communities-list.html

குஜராத் அரசின் இன்றைய சாதி பட்டியல்
http://www.ncbc.nic.in/pdf/gujarat.pdf

* தமிழர் அல்லாத சாதிகள் அந்த அயோக்கிய தனமான சென்னை மாகாண சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். யார் வீட்டு சலுகையை யார் அனுபவிப்பது?

* இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் யாராவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தருகிறார்களா...? மாநிலம் பிரிச்ச உடனே அவரவர் தங்களுக்கு சாதகமாக  சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு அமைத்து கொண்டனர். ஒரு உதாணத்திற்கு:
"1957 க்கு முன்பு இருந்து வசிப்பவர்களுக்கு மட்டும் தான் இனி கேரளாவில்  இட ஒதுக்கீடு". அங்கு வாழும் தமிழன் எப்படி 1957 இல் கேரளாவில் வாழ்ந்தான் என்று நிரூபிக்க முடியும்? கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே? இதில் இருந்து என்ன தெரிகிறது. மலையாளிகளை தவிர வேற எவருக்கும் எந்த சலுகையும் தர கூடாது என்பதற்கு திட்டமிட்டு மலையாளிகள் செயலாற்றுகிறார்கள் என்பது தானே உண்மை?

"400 வருடங்களுக்கு மேலாக அவர்கள் இங்கேயே வாழ்ந்து விட்டார்கள், அதனால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்" என்று சொல்லும் திராவிட சிகாமணிகளே, இதே போல மற்ற மாநிலங்களில் தமிழனுக்கு அங்கே சலுகையும்,ஒதுக்கீடும் வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா? அவர்களும் திராவிடர்கள் தானே? முடியுமா உங்களால்? ..... அடி சக்கை....அடிச்சான் பாரு பல்டி......ஆக, தமிழன் மட்டும் ஏமாந்த சோனகிரியா இருக்கணும்.....!!!

மக்களே, வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ள தமிழர் அல்லாத சாதிகளால் என்ன நிகழ்ந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதை சில தரவுகளின் மூலம் அலசுவோம்.

* ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.
* MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...?
* முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலையும் இது தான்.
* BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...?

அப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...?
* தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது? இன்னும் மராட்டியர்,கன்னடர்,மலையாளி என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும்.
* இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.
* கோவை உள்ளிட்ட பல மாநகரங்களில் பெரு வணிகர்களும், ஆலை முதலாளிகளும் தெலுங்கர்களே.
* PSG உட்பட பெரும்பாலான ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் முதாளிகளும் தெலுங்கர்களே. இவர்களே 'சமச்சீர் கல்வி, மற்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியையும்' எதிர்த்து கடுமையாக தடுக்கின்றனர்.

ஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.

இப்படி பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக,அயோக்கியமா நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பறித்துக் கொண்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்...? இனியும் உங்களை எம் சமூகம் மன்னிக்காது. எனவே வேண்டும் 'சாதி வாரி இட ஒதுக்கீடு'.

(குறிப்பு: 'தமிழர் வரலாறு ஆய்வு நடுவம்' சார்பில் அனைத்து தமிழ் சாதிகளையும் ஒருங்கிணைத்து இந்த இட ஒதுக்கீடு என்ற அயோக்கிய தனத்தை எதிர்த்தும், 'சாதி' வாரி இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் தெரிவிப்பதற்காக 'சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது. பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்)

ஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான். அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கைக்கி விட்டாங்க்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

05 July 2013

பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் அல்ல

கேள்வி: பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக எவ்வளவு உழைத்திருக்கிறார். தீண்டாமை எதிர்ப்பு போராட்டம், ஆலைய நுழைவு போராட்டம், இரட்டை குவளை எதிர்ப்பு போராட்டம் என அவர் நடத்திய போராட்டங்கள் கணக்கில் அடங்காது. எனவே தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் பெரியார் தானே?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:

இங்கே பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர் அல்ல என்றும், அவர் பிற்படுத்த பட்டோருக்கான தலைவர் மட்டுமே என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. நாம் இரண்டு கண்ணோட்டங்களையும் அலசுவோம். அதற்க்கு முன்பு அவர் நடத்திய பொதுவான போராட்டங்களான 'குல கல்வி திட்டம் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம்' போன்றவற்றை ஒரு பார்வை பார்த்து விடுவோம்.

'இந்தி எதிர்ப்பு போராட்டம்':
பெரியாரின் இந்த போராட்டத்தின் நோக்கம் இந்தியால் தமிழ் கெட்டு விடும் , அதை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பிராமணர்கள் பெரும்பான்மையானோர் இந்தி கற்று வைத்திருந்தனர், எனவே அவர் இந்தியை எதிர்த்து, ஆங்கிலத்தை வலியுறுத்தினார். இந்த போராட்டத்தால் தமிழுக்கோ,தமிழருக்கோ எந்த பலனும் இல்லை.

'குல கல்வி திட்டம் எதிர்ப்பு'
இதன் மூலம் பிராமணர்கள் உட்பட அனைவரும் தங்களது குல தொழிலை செய்ய வேண்டும் என்ற ராசாசி அவர்களின் கருத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுவான போராட்டம். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மட்டும் பலன் அடைந்தனர் என்பது முட்டாள் தனமான வாதம்.

தாழ்த்தப்பட்டோருக்காக பெரியார் போராடினாரா?

தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படுபவர்களை பற்றி பெரியாரின் கண்ணோட்டம் பற்றி ஒரு சிறிய உதாரணத்தை பார்ப்போம்.

"துணி விலை உயர்ந்ததுக்கு காரணம் பறைச்சி எல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சதால தான்"
"வேலை இல்லா திண்டாட்டத்துக்கு காரணம் பள்ளன் எல்லாம் படிக்க ஆரம்பிச்சதால தான்"
"அரிசி விலை உயர்ந்ததுக்கு காரணம் கள்ளு குடிக்கிறவன் எல்லாம் சோறு திங்கிரதால தான்"


இந்த செய்தியை தி.மு.க .நடத்தும் முரசொலி பொங்கல் மலர் 1962 ல் வெளியிட்டு உள்ளது .இதே செய்தியை 2-3-1962 பெரியார் அச்சகம் வெளியிடும் நாத்திகம் செய்தி தாளிலும் வெளியிடப்பட்டு உள்ளது

தாழ்த்தப்பட்டோர் பற்றி இப்படி மிக உன்னதமான கருத்துகளை வைத்திருந்த பெரியார் அவர்களுக்காக எந்த ஒரு போராட்டத்தையும் எங்கும் எப்போதும் நடத்தியதே இல்லை. இது அதிர்ச்சி அளிக்க கூடிய மிகவும் கசப்பான உண்மை. இதில் இருந்து பெரியார் 'தாழ்த்தப்பட்டோருக்கான தலைவர்' என்று கூறி வந்தது சரி தானா என்று தீர்மானிப்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

பெரியார் 'பிற்படுத்தபட்டோருக்காக போராடினாரா'?

பெரியார் தாழ்த்தப்பட்டோருக்காக ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை. அப்படி என்றால் தீண்டாமை எதிர்த்து போராட்டம், ஆலைய நுழைவு போராட்டம் எல்லாம் பெரியார் நடத்தினாரே. அதெல்லாம் யாருக்காக நடத்தினார்? இந்த கேள்விக்கு விடை தேடும் முன்பு, நாயக்கர்களால் (பெரியாரின் மூதாதையர்கள்) இந்த தமிழ் மண்ணில் புரையோடிய 'தீண்டாமை' கொடுமை பற்றியும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட பலருள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இங்கே பார்ப்போம்.

தோள் சீலை போராட்டம்

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆதிக்க சாதியினரால் 'பார்த்தாலே தீட்டு' என்று விலக்கி வைக்கப்பட்டு இருந்த அன்றைய சானார் இன்றைய நாடார் சமூக மக்களுக்காக மட்டுமே 'பெரியார்' ஆலைய நுழைவு, வைக்கம் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் அனைத்தும் நடத்தி உள்ளார். தோள் சீலை போராட்டம் என்பது அத்தக்காகிய போராட்டங்களில் ஒன்று. நாடார் சமூகம் உள்ளிட்ட 18 சாதிகளை சேர்ந்த பெண்கள் யாரும் 'தோள் சீலை' (Upper Cloth ) அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்தால் அப்பெண்டிரின் மார்பகங்களை அறுத்து எறிய வேண்டும் என்பது தான் ஆதிக்க சாதிகள் விதித்த கட்டுப்பாடு.அப்படி விதிமுறையையும் மீறி ரவிக்கை அணிந்து சென்ற நாடார் சமூக பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் தான் 'தாலி அறுத்தான் சந்தை சம்பவம்'. 

"பெண்களின் மேலாடைகளை கிழிப்பதற்காக உயர் சாதியினர், ஒரு சிறிய அரிவாளை, நீண்ட கழியின் முனையில் கட்டிப் பயன்படுத்தினார்கள். அதை தொரட்டி என்று திருநெல்வேலிதஞ்சை மாவட்டங்களிலும் தோட்டை என்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் குறிப்பிடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களின் அருகே சென்றால் தீட்டு என்ற காரணத்தால் இக்கருவியை பயன்படுத்தினார்கள்.ஒரு முறை சந்தைக்குக் குப்பாயம் அணிந்து வந்த ஒரு பெண்ணின் மேலாடையைக் கிழிக்கப் பயன்படுத்தப்பட்ட தொரட்டி அவரது தாலிக் கயிற்றையும் அறுத்துக் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து அந்த சந்தைக்குத் தாலி அறுத்தான் சந்தை என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும்இச்சந்தை தாலி அறுத்தான் சந்தை என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது"

Source: தோள் சீலை போராட்டம்

மேலதிக தகவல்:
"The victory of the Channar Lahala or the Upper Cloth Mutiny (Maaru Marakkal Samaram), after half-a-century of violent struggle, is widely seen as the transformative event that triggered a wave of renaissance movements that shaped modern Kerala.
"'Cries for equality began to rise not just from various parts of Kerala, but from the whole of South India after the Channar Mutiny. The agitation to end ‘oozhiyam vela’ or work without pay, the agitation to secure entry into temples, the agitation to secure the right to walk on public roads, all these struggles that went on to change the face of Kerala were inspired by the success of the Upper Cloth Mutiny,' writes historian Joy Balan Vlaathangara in his book ‘Vaikuntaswamiyum Samoohika Navothanavum’. [...]
"It was western influence and the work of Christian missionaries like Charles Meed and Malt during the early part of the 19th century that revealed to the Nadars the indignity of their existence.
"There are historical accounts of labourers who had migrated to Sri Lanka to work in colonial tea plantations returning with enough money to lead European lifestyles. Converted Nadars, too, started wearing upper clothes and saw it as a sign of social progress.
"The upper castes, including the royalty, did not take kindly to these progressive thoughts. An account says that a lower caste lady who went to the palace of the Attingal Rani wearing an upper cloth had her breasts chopped off by royal decree.Out on the streets, the upper castes unleashed violence on Christian Nadar women who had their breasts covered."
Source: http://www.anti-caste.org/2009/07/150-years-ago-today-women-of-the-nadar-caste-in-kerala-won-right-to-cover-their-breasts.html

மேலாடை அணியலாம் என்று அரசு அறிவித்த தீர்ப்பு


நாடார் மக்களின் ஆலைய நுழைவு போராட்டம் பற்றி,
இரண்டாவது மூன்றாவது  கட்டுரைகளான  'தெற்கில் முதல் வெளிச்சம் '  மற்றும்'தென் திருவிதாங்கூர் தோள் சீலைப் போராட்டம் பற்றித் தோழர் சங்கையா விரிவாகவே பேசினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அன்று இருந்த சாதிக்கட்டுமான இறுக்கம்சாதி வேறுபாடுகள் 16 அடி, 36 அடி, 66 அடி எனக் கடைப்பிடிக்கப்பட்ட கொடுமைஒடுக்கப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்மார்புக்கு மேலே சேலை கட்டக்கூடாது எனும் வழக்கம்அதனை எதிர்த்து நடந்த போராட்டம் போன்றவற்றையும் நாடார்கள் என்னும் சாதியினரின் அன்றைய சமூக நிலமைஅவர்கள் சந்தித்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் பொண்றவற்றை புத்தகத்தின் பகுதிகளை வாசித்துக்காட்டி ,தோழர் சங்கையா எடுத்துக்காட்டியபோது இப்படியெல்லாம் ஒரு 150 ,160 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா ?எனத் தோழர்கள் கேள்வி எழுப்பிஅறிந்து கொள்ள உதவியது.

                            வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர் சங்கையா வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில் நுழைவுப்போராட்டம்கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் ,நாடார்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள்,அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874 &1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899)  போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம்வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை,நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்தது  போன்ற செய்திகளை நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார். 
Source: http://vasipporkalam.blogspot.in/2013/02/blog-post_13.html

இப்படி கணக்கு வழக்கு இன்றி தீண்டாமை அனுபவித்த 'நாடார்' சமூகத்துக்காக பெரியார் உழைத்ததை தான் இன்று அவர் ஏதோ 'தாழ்த்தப்பட்டோருக்காக' போராடினார் என்று சப்பை கட்டு கட்டுகின்றனர். முத்துராமலிங்க தேவர்,ராஜாஜி உட்பட பலரும் பறையர்,நாடார் போன்றோருக்கு 'மதுரை மீனாட்சி அம்மன்' கோவிலுக்குள் நுழைய 'ஆலைய நுழைவு போராட்டம்' நடத்தியுள்ளனர். ஆனால், பெரியார் நாடாரை விடுத்து இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் யாருக்காகவும், எங்கேயும், எந்த காலத்திலும் ஒரு சிறு துரும்பையும் தூக்கி போட்டது இல்லை.

அப்படி என்றால், ஏன் பெரியார் 'நாடார்' சமூக மக்களுக்கு மட்டும் போராட வேண்டும்? காரணம், இன்று நம்முள் எழுந்துள்ள தமிழ் தேசிய சிக்கலின் ஆணி வேறான 'தெலுங்கர்களின் ஆதிக்கம்' என்பதை சுமார் 150 வருடங்களுக்கு முன்பே அறிந்து கொண்டு, தங்களுக்கான ராஜ தந்திர காய் நகர்த்தல்களை செம்மையாக செய்து, நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியவர்கள் நம் நாடார் இன மக்கள். அவர்களின் எழுச்சியை மட்டுபடுத்தவும், நாடாரும் - பெரியாரும் பரஸ்பரம் தம்முள் வந்த அரசியல் திரை மறைவு ஒப்பந்தம் தான் பெரியாரை நாடாரை நோக்கி நகர்த்தியது, செயல் படுத்தியது.

பெரியார்-காமராஜர் இணைந்த அரசியல்
* சாணார்களின் ஒற்றுமை தான் அவர்களின் இன்றைய சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படை காரணம். அவர்கள் எந்த கூட்டத்துக்கு சென்றாலும் கையில் பணம் கொண்டு சென்று கொடுப்பதும், ஒன்றாக செயல்படுவதையும், தனது சமூக மக்கள் அவ்வாறு இல்லை என்றும் அடிக்கடி திரு.முத்துராமலிங்க தேவர் அவர்களே சிலாகித்து பேசி இருப்பார். 'கோவிலில் நுழைய விடவில்லையா? உனக்கென்று கோவிலை கட்டு. வங்கியில் உனக்கு கணக்கு இல்லையா? உனக்கென்று வங்கியை உருவாக்கு' --- இது தான் நாடார்களின் எழுச்சியின் தாரக மந்திரம்.

* 1919 ஆம் ஆண்டில் சாணார்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடோ, சலுகையோ வேண்டாம் என்று அறிவித்து விட்டனர். எனவே அவர்கள் SC பட்டியலிலோ, BC பட்டியலிலோ அப்போது இல்லை.

* 1956 ஆம் ஆண்டு "தங்களுக்கு சலுகை வேண்டாம், ஆனால் BC பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று போராடி வெற்றி பெற்றனர். அன்று முதல் இன்று வரை BC பட்டியலில் உள்ளனர். BC பட்டியலுக்குள் வந்துவிட்டால் 'தீண்டாமை' மற்றும் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்ற இமேஜ் போய் விடும் என்ற ஞானம் பல ஆண்டுகளுக்கு முன்பே (அதுவும் 1919 ஆம் ஆண்டு இல்லாத ஞானம்) நாடார் சமூக மக்களுக்கு வந்ததன் பின்னணியில் பெரியாரும் காமராஜரும் இல்லாமல் இல்லை. இந்த ஒரு உதாரணம் மூலம் எவ்வளவு நுணுக்கமாக தாழ்த்தப்பட்டோர், உயர் சாதி இடையேயான இன்றைய வன்முறைக்கு, திராவிடர்கள் வித்திட்டு வளர்த்து வருகின்றனர் என்பது தெளிவாக புலப்படும். அவர்கள் மனது வைத்தால் தான் ஒருவன் உயர் சாதி, அவர்கள் மனது வைத்து விட்டால் தாழ்ந்த சாதியும் (உதாரணம்: சின்ன மேளம்), உயர் சாதி தான்.

* இங்கே எந்த நாயுடுவுக்கும், பறையருக்கும் சண்டை வராது. வன்னியருக்கும், பறையருக்கும் தான் சண்டை வரும். அதற்க்கு 'ஆதிக்க சாதிக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும்' இடையேயான சண்டை என்று திராவிடர்கள் விளக்கம் தருவார்கள். நாயுடுக்களும், நாயக்கரும் ஆதிக்க சாதி இல்லையா?

அட, பிற்படுத்த பட்டோருக்காவது பெரியார் உருபப்டியாக ஏதாவது செய்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. அவரின் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்.
"தெலுங்கர்களை பாதுக்காக்க ஒரு பாதுக்காப்பான கட்டமைப்பாக பிற்படுத்தோர் அரசியலை கையில் எடுத்து, அவர்களையும் தாழ்த்தப்பட்டோரையும் மோத விட்டு, அதன் மூலம் தனது இருப்பை எப்போது தக்க வைத்து கொள்வது மட்டும் அவர் நோக்கம்". இது தான் 'திராவிடத்தின்' நோக்கமும் கூட."

இந்த உண்மையை தமிழ் சாதிகள் விளங்கி கொள்ளாதவரை, சாதி மோதல்கள் தினம் தோறும் அரங்கேறுவதை தவிர்க்க முடியாது. சிந்தியுங்கள் தமிழர்களே...!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

04 July 2013

திராவிடமே ஈழ விடுதலைக்கு முதல் எதிரி

கேள்வி: கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் 'ஈழத்தை' வைத்து அரசியல் நாடகம் ஆடினாலும், வைகோ, பெரியார் போன்றோர் ஈழத்துக்காக குரல் கொடுத்து வந்து தானே இருக்கிறார்கள். 'வைகோ' ஒரு தெலுங்கர் என்று கூறி அவர் மீது சேற்றை வாரி இறைத்தால், ஈழத்துக்காக குரல் கொடுத்த ஒரு தமிழர் தலைவரை இங்கே காட்ட முடியுமா...?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இந்த கேள்விக்கு பதிலை நேரடியாக பார்க்கும் முன்பு வரலாற்றை சற்று நேர் செய்வோம்.

வருடம் 1965

தமிழ் தேசியத்தின் ஒரு பகுதியாக தமிழக மாணவர்களால் தன்னிச்சையாக எழுந்த போராட்டம் 'இந்தி எதிர்ப்பு போராட்டம்'. உண்மையில் அது தமிழருக்கான ஒரு தமிழ் தேசிய இனப் போராட்டம். தமிழர் என்ற ஒரு தேசிய இனத்தை மதித்து நடக்காத இந்திய அரசை எதிர்த்து தமிழக மாணவர்கள் தன்னிச்சையாக கொதித்து எழுந்தனர். மேலே சொன்ன போராட்டத்தில் பெரியாரோ, திராவிட கட்சிகளோ எந்த அக்கறையும் காட்டியது இல்லை. ஆனால் அவர்கள் தான் அனைத்தையும் செய்தார்கள் என்றும், 'இனப்போராட்டம்' என்பது 'மொழிப்போராட்டமாக' சுருக்கப்பட்டு காயடிக்கப்பட்டதும் இதே திராவிடர்கள் தான் என்பதும், நோகாமல் நொங்கு தின்பதை போல, போராட்டத்தில் பெரிதும் பங்கு ஆற்றாமலேயே, அதன் பலன் மொத்தத்தையும் அனுபவித்து ஆட்சிக்கு வந்ததும் இதே திராவிட கயவர்கள் தான் என்பதையும் சற்று ஆதாரங்களுடன் பார்ப்போம்.

சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு பேரணி -- இந்து நாளிதழ்

பெரியாரின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை
* இந்தி போராட்டத்தை எதித்த பெரியார் தான், தமிழகத்தில் ராஜாஜிக்கு முன்பாகவே  இந்தியை கொண்டு வந்தவர் என்பதும்,அதை போற்றி வளர்த்தவர் என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?
"இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே"  -- "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436

* பின்பு இதே பெரியார் தான், பெருவாரியான பிராமணர்கள் இந்தியை கற்று பயின்று இருக்கிறார்கள் என்பதால், பிராமணர்களை எதிர்க்கும் பொருட்டு இந்தியை எதிர்த்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

* ஆக, ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதனால் தமிழுக்கோ,தமிழருக்கோ நன்மை பயக்கும் என்ற பதத்தில் பெரியார் செயல்பட்டதே இல்லை என்பதும், இந்திக்கு மாறாக அவர் 'ஆங்கிலத்தை தான்' முன் வைத்தார், செயல்படுத்தினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
Source: http://newindian.activeboard.com/t44595205/topic-44595205/?sort=oldestFirst&page=2

என்றுமே ஆங்கிலத்துக்கு ஆதரவாக நின்று இந்தியை எதிர்ப்பது என்னும் திராவிடர் கழக நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழுக்கென்று - தமிழர் சார்பாக - நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் பெரியார் 'காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து' நடக்கும் போராடம்மாக வர்ணித்து கொச்சை படுத்தினார்.
"இந்தியைத் திணிப்பதில்லை என்று அன்றே காமராசர் எனக்கு எழுதித் தந்திருக்கிறாரே! அந்த உறுதிமொழியை அரசினரும் மீறாதபோது, ஏன் கிளர்ச்சி செய வேண்டும்? பதவியைப் பிடிப்பதற்காகக் கண்ணீர்த்துளிகள் (திமுக) செத்த பாம்பை (இந்தி எதிர்ப்பு) எடுத்து ஆட்டுகின்றனர்".கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

என்று 1965 ஜனவரி 19 அரகண்டநல்லூரில் பேசினார். இப்படி 'வெறும் வாயை மட்டும் மெல்லுங்கள், போராட்டம் கீராட்டம் எல்லாம் வேண்டாம்' என்று தமிழருக்கு பொல்லாத அறிவுரை வழங்கினார் பெரியார். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாகதமிழனுக்கே உரிய போராட்ட குணத்தால் வரலாற்று சிறப்புமிக்க அந்த போராட்டம் வெடித்தே விட்டது. விளைவாக இந்திய வான்படைகள் தமிழரின் மீது பெரியார் இனப்போரையே தொடுத்தன. பல உயிர்கள் செத்து விழுந்தன.

ஈழ விடுதலை விசயத்தில் பெரியார் இன்னும் மோசம். தந்தை செல்வாவிடம் "ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்" என்று சப்பை கட்டி அனுப்பி விட்டார் தமிழக அரசிலில் தனித்து பார்க்க முடியாத சக்தியாக பெருமையோடு பேசப்படும் பெரியார்.

திமுகவின் இந்தி எதிர்ப்பு யோக்கிதை
திமுக தலைவர்கள் தளைப்படுத்தப்பட்டனர். மிகப்பெரிய அடக்குமுறையை இந்திய அரசு ஏவி விட்டது.அன்று எழுந்த மாணவர் போராட்டம் கண்டு அரண்டு போன திமுக, பின்வாங்கியது. அந்த இயக்கமும் ஆங்கிலத்துக்கு தான் வரிந்து கட்டிக்கொண்டு நின்றதே அன்றி தமிழுக்காக அல்லவே! இந்த நிலையில், அம்மாபெரும் மொழிப்போரில் பெரிதாகப் பங்கெடுக்காமல் அந்த கழகம் ஒதுங்கியே நின்றது.

அண்ணா தம்முடைய உண்மை உருவத்தைக் காட்டி விட்டார்! அம் மொழிப்போருடன் "ஒட்டுமில்லை, உறவுமில்லை" என்று அறிக்கை விடுத்து திமுக வின் கயமைக்கு கட்டியம் சொன்னார். அம் மொழிப்போரை கைவிடுமாறு 10.2.1965 அன்று மாணவர்களுக்கு ஓர் அறைகூவல் விடுத்தார். அதை கண்டு பெரியார் "பூனை கோணியில் இருந்து வெளிவந்துவிட்டது" என்று சொல்லி நகையாடினார்." -- கவிஞர் கருணானந்தம்: "தந்தை பெரியார்" புத்தகம், பக்கம் 416-418.

இறுதியில் உயிர்கள் பல செத்து விழுந்தாலும், தமிழுக்கென்று போராடாமல், பின்வாங்கிய திமுக, செத்த உயிர்களின் மீது முதன் முறையாக 1965 இல் ஆட்சி அமைத்தது.

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது:
இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் மொழிந்த திராவிடர்கள், தமிழருக்காக தமிழரால், தமிழை முன்னிறுத்தி தன்னிச்சையாக எழுந்த தமிழ் தேசிய சின்னமான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, மீண்டும் தங்கள் கயமைத் தனத்தால் தனது அரத பழசான 'இந்திக்கு மாற்றான ஆங்கிலம்' என்று திசை திருப்பி, தமக்குள்ள அரசியல் செய்து தமிழ் தேசிய எழுச்சியை அடக்கினர். இதன் காரணமாக, அன்று முதல் இன்று வரை எந்த திராவிட இயக்கத்திலும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இளைங்கர்கள் இல்லாமல் மிக கவனமாக பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது.

வருடம் 2013

சமீபத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல், ஈழத்துக்காக ஒரு பெரு நெருப்பு 'லயோலா' கல்லூரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு அது தமிழ் நாடு முழுவதும் பற்றி கொண்டது. இதை பார்த்து ஆளும், எதிர் கட்சிகள் அரண்டு தான் போயின. ஆளும் கன்னட ஜெயலலிதா அம்மையாரின் அரசோ, 'இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும்' என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, 'அது தீர்மானமாக மட்டுமே இருக்க வேண்டும், செயல் வடிவம் பெற்றுவிட கூடாது' என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். விளைவு அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரை இன்றி விடுமுறை அறிவித்தார். அனைத்து கல்லூரி விடுதிகளையும் மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு மாணவர்களின் எழுச்சியை அடக்க தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.


தமிழருக்கான நாடுகேட்டு மாணவர்கள் போராட்டம் (2013)

ஆனால் எதிர் கட்சியை இருக்கும் விஜயகாந்த் அரசோ, அதற்க்கு அடுத்து இருக்கும் தெலுங்கர் கருணாநிதி அரசோ இதை வைத்து வேறு ஒரு அரசியல் நாடகம் ஆடியது. மாணவர்களின் உண்மையான போராட்டம் 'ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும்' என்பதே. இதை பல முறை, அனைத்து மாணவர்களும் 'புதிய தலைமுறை' உள்ளிட்ட தொலைக்காட்சி ஊடகங்களின் வாயிலாக ஆணித்தரமாகவே வலியுறுத்தினர். ஆனால், திராவிட ஊடங்கங்கள் 'அமேரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்' என்று போராடுவதாக அயோக்கியத்தனமாக செய்தியை திரித்து வெளியிட்டனர். இதன் மூலம் தங்களின் இந்திய (திராவிடர்களின் பாணியில் சொன்னால் ஆரிய பாசம்) பாசத்தை மறைமுகமாக வலியுறுத்தினர். இதன் மூலம் 'மாணவர்களின் ஈழ நாடு' கோரிக்கை என்பது திட்டமிட்டு மறைக்கப்பட்டது.
Source:http://tamil.oneindia.in/news/2013/03/24/tamilnadu-arts-colleges-re-open-tomorrow-172079.html

வைகோ நல்லவர்தானே...?
* சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள இராணுவ மயமாக்கலையும் எதிர்க்கும் வைகோவுக்கு இங்கே பல நூறு ஆண்டுகளாக தெலுங்கர்களின் குடியேற்றமான பாளையங்களும், தெலுங்கர்களின் இராணுவ மயமாக்கலின் வடிவமாக அவை இன்றும் தமிழருக்கு எதிராக அதே பெயரில் வழங்கி வருவதும் தெரியாதா...? அதை அவர் எதிர்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் அதை வெளியில் சொல்லி இருப்பாரா...? ஏன்? ஊருக்கு மட்டும் உபதேசமா?

* ஈழத்தில் ஒரு தமிழனை தலைவராக நிறுத்தும் போது, தமிழகத்தில் திராவிடனை ஏன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு அடிப்படை கேள்விக்கு பதில் சொல்வாரா..?

* விஜய நகர பேரரசு தொடங்கி இன்று வரை தமிழனை மொட்டை அடிப்பது தெலுங்கர்களான திராவிடர்கள் தான் என்று உண்மை தெரிந்தும், வைகோ  அவர்களின் தலைமையை தமிழர்கள் ஏற்கத் தான் வேண்டுமா?

* எந்த தமிழன் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் சாதி கட்சி என்றும், எந்த தெலுங்கர் கட்சி ஆரம்பித்தாலும் அதை எல்லாம் முற்போக்கு கட்சி என்று சொல்லும் திராவிட ஊடங்கள், 'வைகோ போன்று தமிழனுக்கு உழைத்த ஒரு தமிழனை காட்டு பார்ப்போம்' என்று கேட்பதில் நியாயம் இருக்கிறதா? முதலில், தமிழனுக்காக தமிழன் போராட இங்கே தமிழ் நாட்டில் களம் இருக்கிறதா? ஆளும் கட்சி, எதிர் கட்சி, மூன்றாம் நான்காம் கட்சி என்று எல்லாருமே தெலுங்கர்கள் நிரம்பி இருக்க, எமக்காக யாம் எங்கே போராடுவது?

விஜயகாந்த் உள்ளிட்ட தெலுங்கர்கள் குறித்து பாரதி ராஜா
"இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த வெள்ளைக்காரன், ஒரு கட்டத்தில் நாட்டைவிட்டே ஓடிட்டான். டெல்லிக்குப் படையெடுத்த மொகலாயனும் திரும்பிப் போய்ட்டான். ஆனா, தென்னிந்தியாவில் படையெடுத்து வந்த விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவங்க என்ன ஆனாங்க? கேரளாவிலும் கர்நாடகாவிலும் அவங்களைத் துரத்தியடிச்சுட்டாங்க.ஆனா, தமிழ்நாட்டுல? இதுதான் பல பட்டறை கண்ட பூமியாச்சே... கலைஞர் 'பராசக்தி'யில் சொன்னது மாதிரி, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அவங்களையும் வாழவெச்சுட்டு இருக்கு. அவங்களும் இங்கே சுகவாசியா இருந்து பழகிட்டதால, இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கிறாங்க. தமிழர்களின் பூமியில் அண்டிப் பிழைக்க வந்து தஞ்சம் அடைஞ்சவங்க, இப்போ தமிழ்நாட்டின் மண்ணுக்கும் ஆட்சிக்கும் சொந்தம் கொண்டாடுறாங்க. மிஸ்டர் விஜயகாந்த்... பாவம் தமிழர்கள்... எங்களை விட்டுடுங்க!''"
Source: http://tamil.oneindia.in/movies/news/2013/06/bharathirajaa-s-attack-on-vijayakanth-177987.html




தமிழரை வீழ்த்திய காலம் தொட்டு, இன்று வரை நேரடியாகவும், திராவிடம் என்று மறைமுகமாகவும் தெலுங்கர்களும்,கன்னடர்களும் நம்மை அடிமை படுத்தி ஆண்டு கொண்டு இருக்கின்றனர். எனவே வைகோ போன்ற தெலுங்கர்கள், ஈழத்தில் தமிழனுக்கென்று ஒரு நாடும், அதற்க்கு அவனே தலைமையும் இருக்க வேண்டும் என்று போராடுவது உண்மை என்றால், தமிழ் நாட்டிலும் அதையே அவர் வழிமொழிய வேண்டும். மற்றபடி வைகோ ,திராவிடத்தை விடுத்து எமக்காக போராடும் தெலுங்கர் இன தோழராக இருக்கலாம். தலைவராக ஆக முடியாது. மீண்டும் மீண்டும் தெலுங்கரிடம் ஆட்சியை கொடுத்து அடிமைப்பட தமிழர்கள் தயார் இல்லை.

எனவே தமிழனுக்கேன்று ஒரு நாடு அமைவதையோ, அவனுகென்று ஒரு அடையாளம் இருப்பதையோ எதிர்க்கும் முதல் எதிரிகளே திராவிடர்கள் தான். இவர்கள் ஈழம் பெற்று தருவார்கள் என்று பகல் கனவு காணும் மூட தமிழர்களே.....இனிமேலாவது திருந்துங்கள்....!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்